எஸ்.பி.பி சரண் இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தனது அப்பாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கண்கலங்கியப்படி தெரிவித்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் கடும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரார்த்தனையும் நம்பிக்கையும் அவரை விரைவில் குணமாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் திரையுலகினர் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டுப்பிரார்த்தனைக்கு அவர் நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனவும் தலை வணங்குகிறோம் என்று கூறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனாவில் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் அவ்வப்போது அப்டேட் வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளிட்ட காணொளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.