வில்வ பழம் உலகம் முழுவதும் அதன் மருத்துவ பலன்களுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய பழமாக உள்ளது.
இதில் இயற்கையாகவே இருக்கும் மருத்துவ குணங்கள் பல நோய்களில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க பயன்படும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்
- மலச்சிக்கல், குடல்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்த இந்த பழம் பயன்படும்.
- வில்வ பழத்தின் சாறை குடிப்பது உங்களின் செரிமானத்தை உடனடியாக ஊக்குவிக்குமாம்.
- வில்வ மரத்தின் இலைகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஃபெரோனியா கம் இரத்தத்தில் இருக்கும் குளூகோஸின் அளவை கட்டுப்படுத்தும்.
- பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை குறைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது சர்க்கரை நோயின் தீவிரத்தையும் குறைக்க உதவி செய்யும்.
- வில்வ பழம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படும்.
- அதிகளவு புரோட்டின் இருக்கும் இது சேதமடைந்த திசு மற்றும் தசைகளை சரிசெய்ய உதவி செய்யும்.
- உடனடி ஆற்றல் வழங்கக்கூடிய இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை தக்கவைத்து கொள்ள உதவி செய்யும்.
- இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இயற்கை கிருமிநாசினியான இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போவதை தடுக்கும்.
- மேலும் இது மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த உதவி செய்யும்.