இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா இருக்கா? அப்படினா இந்த மாதிரியான உணவை சாப்பிட்டு பாருங்க... இனி உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது...

ஹீமோகுளோபின் என்பது உடலுக்கு மிகவும் முக்கியமானவை. நம் உடலில் இருக்கும் இரத்த சிவப்பு அணுக்களில் இரும்புச்சத்து நிறைந்த புரதமே ஹீமோகுளோபின் என்று அழைக்கப்படுகிறது.

 

நம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க அருகம் புல்லை அரைத்து அதன் சாறை மோருடன் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய குறையும். இதை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் உடலில் இரத்தம் சுத்தமாகும்.

மேலும் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அதை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் பிரச்சனைகள் குறைந்து விடும். இதை தினமும் பாலில் ஊற வைத்து தொடர்ந்து ஒன்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கூடும்.

மேலும் மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்த உசாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் வரும் வயிற்று வலி சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி  புடலங்காயின் இலைச் சாற்றை தினமும் காலையில் குழந்தைகளுக்குத் கொடுத்து வந்தால் இருமல் காய்ச்சல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். அதுமட்டுமின்றி தொடர் இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை குணமடையும்.

மேலும் மலச்சிக்கல் நோய்கள் வராமல் தடுக்கலாம். தினமும் கீரைகளை உணவில் சேர்த்து முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரை இவற்றை பருப்புடன் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பதிய இரத்தம்  உற்பத்தியாகும்.

அதுமட்டுமின்றி  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட்டைஉணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்பு சத்து, போலிக் அமிலம், நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும்க் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதால் இதனை தடுக்கலாம். அதில் பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதில் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.