பொதுவாக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. வெயிலில் அதிகமாக சுற்றித் திரிபவர்களுக்கு தான் அதிகபட்சமாக எண்ணெய் பசை சருமம் இருக்க வாய்ப்புண்டு. உங்களுடைய சருமம் எண்ணெய் பசை சருமமாக இருக்கிறதென்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சருமத்திற்கு எப்போதும் கடைகளில் விற்கப்படும் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், இந்த இயற்கை முறையை பயன்படுத்துங்கள்.
வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்கை குளிர்ச்சித்தன்மை கொண்டது. வெள்ளரிக்காயை நைசாக அரைத்து முகத்தில் அப்ளை செய்து வட்டப் பாதையில் மசாஜ் செய்யுங்கள். 3-5 வரை செய்யலாம். அப்படி செய்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.
காஃபி பொடி :
1 ஸ்பூன் தயிருடன், 1ஸ்பூன் காஃபி பொடி கலந்து முகம் முழுவதும் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். 2 நிமிடங்கள் செய்து விட்டு, 5 நிமிடங்கள் காய வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
ஓட்ஸ் :
ஓட்ஸ், தயிர், தேன் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை நன்கு கலக்குங்கள். பின் முகத்தில் 5 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அடுத்ததாக 10 நிமிடங்கள் காய வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ :
கிரீன் டீ பைகளை 2 எடுத்துக்கொள்ளுங்கள். பையை கிழித்து காய்ந்த கிரீன் டீ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு சில துளிகள், சர்க்கரை 2 ஸ்பூன், சுடு தண்ணீர் சிறிதளவு என சமஅளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள்.
பின் முகத்தில் அப்ளை செய்து வட்டப்பாதையில் 4 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பின் குளிந்த நீரில் கழுவிவிடுங்கள்.
தேன் :
தேன் 1 ஸ்பூன் , எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மற்றும் பாதாம் கொட்டையை மொறமொறப்பாக அரைத்து கொள்ளவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஸ்கிரப் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுங்கள். இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு உடனே அகலும்.
ஐஸ் :
ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டி இவற்றைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு, சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதை முற்றிலும் தடுக்கலாம்.
சிறிது புதினா இலைகள் :
சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.