சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் இடம்பெறுகிறார்கள். இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார் ‘நாச்சியார்’, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துவரும் நடிகை சித்ரா.
சீரியல் தொடர்களில் நடிக்க நடிகைகள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும் என்கிற காலம் மலையேறி போய், தற்போது கலராக இருந்தால் மட்டும் போதும், மொழி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து நடிக்க வைத்து விடலாம் என்று சீரியல் இயக்குனர்கள் நினைக்கின்றனர்.
அப்படி வாய்ப்பு பெற்று பிரபலமாகும் சில நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு க வர்ச்சியில் இறங்கி இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை சித்ரா. பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது . கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை நடிக வைக்கின்றனர்.
ஆனால், நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர் தான் ஆனால் இதுவும் அழகு தானே. நம்ம ஆளுங்க ஏன் கலர் அதிகமாக வெள்ளையா இருக்குற பெண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என தெரிவியவில்லை என்று விளாசியுள்ளார்.
இந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே தமிழ் நடிகைகளின் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்று கோ பமாக பேசியுள்ளார்.