சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால்.
இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அது திருப்திகரமாக இல்லாததால் அமலா பாலை சரித்திர படத்திலிருந்து மணிரத்னம் தூக்கியெறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ஏற்கனவே ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலா பால் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். அமலா பால் சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
பெரும்பாலும் இவை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. இதனால் அவரின் மீது இருந்த இமேஜ் குறிகிய காலத்தில் டேமேஜ் ஆகி இருப்பதால் திரைப்பட வாய்ப்புகள் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத கதையாகி உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, லாக்டவுன் நேரத்தில் கதை எழுத ஆரம்பித்து விட்டார் அமலாபால். அந்த வகையில், படுக்கையில் அமர்ந்து கதை எழுதுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதில், மேலாடையை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு அதில் இருக்கும் மச்சம் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.