தமிழில் பானா காத்தாடி படத்தில் சினிமா பயணத்தினை ஆரம்பித்த நடிகை சமந்தா இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து தனக்கு என்று தனி இடத்தினை உருவாக்கி வைத்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் தன்னுடைய வாழ்கை பயணத்தை திருமண நிகழ்சிகளில் வரவேற்ப்பு கொடுக்கும் வெல்கம் கேர்ள்-ஆக தான் தன் பணியை தொடங்கினார்.

இதனை பல பேட்டிகளில் கூறியுள்ளார். தற்போது அவர் வேலை செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் இது சமந்தாவா என்று அ திர்ச்சியில் உறைந்துள்ளனர்.