நமது உடலை சிறப்பாக செயல்படவைப்பதற்கு நமது நுரையீரல் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை சுவாசிக்கின்றன. அது மட்டுமில்லாமல், புகைப்பிடித்தலுடன் காற்றிலுள்ள மாசுபாட்டிகளால் சில ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்களையும் சேர்த்தே நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல் பலவீனம் அடைகிறது. இந்த மாசுபாட்டினால் ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் என பல சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சுவாசப் பிரச்சனை
நமது நுரையீரலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்தல் ஆகும்.
ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளின் மூலம் நீண்ட நாட்கள் நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ முடியும். இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கங்கள் இவற்றால் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் போகிறது.
உலக சுகாதார நிறுவனம் அளித்த அறிக்கையின் படி, 235 மில்லியன் அளவிலான மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வோம்.
ஆப்பிள்
நுரையீரல் மிகவும் சிறப்பாக செயல்பட அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோடீன் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
எனவே, இவை அனைத்தும் ஆப்பிளில் உள்ளன. ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆப்பிள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வால்நட்
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேன்டி- அசிட்கள் அதிகமாக உள்ளது. எனவே இதை கை நிறைய எடுத்து அதை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். இது விலை உயர்ந்தது. மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் இதில் நிறைய உள்ளன.
பெர்ரீஸ்
காய் மற்றும் ப்ளுபெர்ரி இரண்டும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க திறம்பட செயல்படும் பெர்ரி ஆகும். இவற்றில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவுகிறது.
ப்ரோக்கோலி
இதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை ப்ரோக்கொலின் தடுக்கிறது.
மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை அதிகம் தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகிறது.
கெய்ன் மிளகு
இதில் உள்ள கேப்சைசின் மேல் மற்றும் கீழ் சுவாச பாதைகளில் இருந்து சளி ஜவ்வுகளை பிரித்து பாதுகாக்கும். இந்த மிளகில் தேநீர் வைத்து குடிப்பதன் மூலம்,அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் தெரியப்படுத்த மற்றும் குறைக்க சிறப்பாக செயல்படும்.
இஞ்சி
இஞ்சி அழற்சிகளை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசுபாட்டினை நீக்குவதற்கும் பயன்படும்.மேலும் இது நெஞ்செரிச்சலை நீக்குகிறது.
காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலின் சுழற்சியை இஞ்சி மூலம் குணப்படுத்தலாம். இதன் மூலம் சுவாச கோளாறுகளை இஞ்சி எதிர்த்து போராடும். நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஆளி விதைகள்
பி.எம்.சி கேன்சர் ஆய்வுகட்டுரையில் வெளியான ஒரு சிறந்த ஆய்வின் படி, இந்த ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரலை பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கும்.
பூண்டு
பூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. டாக்சின் மற்றும் கார்சினோஜீன் குறையும். அதுமட்டுமில்லாமல் பூண்டு நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
தண்ணீர்
தண்ணீரை விட எது சிறப்பாக செயல்பட முடியும்? உங்களின் உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த முறையில் வழி காட்டுக்கிறது.
காய்ந்த நுரையீரல் எரிச்சலுக்கு மற்றும் அதிக அழற்சிக்கு வழிவகுக்கின்றன. எனவே தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிக்கவும்.
மஞ்சள்
மஞ்சளில் அழற்சியை எதிர்க்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. வைரஸ்களை எதிர்க்க உதவுகிறது. அதிலுள்ள குர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது, ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது.
இந்த உணவு பொருட்களை உங்களின் அன்றாட உணவில் என்றும் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் சந்தோசமான நுரையீரலைப் பெற்று நல்வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.