இன்றைய பரபரப்பான உலகில் பாமர மக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் எண்ணெய் பாமாயிலாகத்தான் இருக்கின்றது. அதற்குக் காரணம் மற்ற எண்ணெய்களை விட பாமாயில் விலை குறைவு என்பதுதான். உண்மையில் இந்த பாமாயில் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கின்றதா? அல்லது நல்லதா? என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
டிவி விளம்பரங்களில் ரீபைண்டு ஆயில் விளம்பரங்கள் மக்களை பெரிதளவில் கவர்ந்து வருகின்றது. அதை நம்பி ரீஃபைண்ட் ஆயில் உடலுக்கு நன்மை அளிக்கும் என்று மக்கள் நம்புவதுதான்.
உண்மை என்னவென்றால் பாமாயில் எண்ணெய் உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்க கூடியது அல்ல. பாமாயில் என்பது ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான்.
இந்த தாவரம் இந்தோனிசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் பயிராகிறது. மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெய்யை வாங்கி இங்குள்ளவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு அதன் தரத்தை மாற்றி விடுகிறார்கள்.
சமையலுக்கு பாமாயில் பயன்படுத்துவது என்பது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது. எகிப்து நாட்டிலுள்ள மக்கள் அப்போதே பாமயிலை பயன்படுத்தி உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன.

15 கிலோ பழத்திலிருந்து 20 முதல் 25 சதவிகிதம் வரை பாமாயில் கிடைக்கும். வெறும் 100 கிராம் பாமாயில் எண்ணையில் 884 கலோரிகள் உள்ளதாக மதிப்பிட்டுகிறார்கள்.
இதில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. குறிப்பாக வேறு எந்த பழத்திலும் கிடைக்காத அளவு வைட்டமின் ஈ இந்த பழத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ரீஃபைண்டு செய்யப்படாத ஆயிலில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருக்கும். எனவே பாமாயிலை பொறுத்த வரை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது உடலுக்கு நல்லது.