வள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவச் சேர்ந்த பிரியா ராமன். தமிழில் பல படங்களில் நடித்துள்ள பிரியா ராமன் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது டிவி தொடர்களைத் தயாரித்து, நடித்தும் வருகிறார். இவரது கணவர் நடிகர் ரஞ்சித். இருவரும் காதலித்து மணந்தவர்கள். இருவரும் சேர்ந்து இரு படங்களையும் தயாரித்துள்ளனர்.

1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன்.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.பின்னர் நீண்ட வருடங்களுக்கு பின், சூரிய வம்சம் படத்தில் நடித்தார்.

இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.நேசம் புதுசு’ படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

திருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து ஒரே அடியாக விலகினார் பிரியா ராமன்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று 2014 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா ராமனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது 42 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக பபுகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.