பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar) செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கை பயணத்தை துவங்கியவர். அதன்பின், டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின், மேயாத மான் என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே, தனது வசீகரமான நடிப்பால், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ருத்ரன், பத்து தல படங்களில் அவர் நடித்திருந்தார். அடுத்து இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 படங்களில் பிரியா பவானி சங்கர் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக கூறும் பிரியா பவானி சங்கர், அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.வழக்கமாக, சினிமா பீல்டில் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகைகள், ரசிகர்கள் மத்தியில் இருக்கும் தங்களது இமேஜ் போகாமல் இருக்கவும், தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக்கொள்ளவும் தங்களது காதல், திருமணம் போன்ற விஷயங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த மாட்டார்கள்.
அப்படியே, தங்களை பற்றிய இதுபோன்ற ரகசிய தகவல்கள் வெளியே வந்தாலும், அப்படி ஒன்றும் இல்லை, அதுவெல்லாம் யாரோ கிளப்பி விட்ட வதந்தி எனவும், சமாளித்து உண்மையை மறைத்து விடுவர்.

ஆனால், வளர்ந்துவரும் நடிகையாக இப்போது உள்ள பிரியா பவானி சங்கர், தனது காதலை ரசிகர்கள் மத்தியில் பப்ளிசிட்டி செய்தது மட்டுமின்றி, காதலருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இது தைரியமா, ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையா என தெரியவில்லை. ஆனாலும், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்களை ரசிகர்கள் கூட்டம் விரும்பி பார்க்கிறது. இதன் வெளிப்பாடாக தான், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

இப்போது, மலை மீது அமைந்துள்ள ஒரு இடத்தில், நீல வானம் தெரியும் இடத்தில், தடுப்பு கம்பிகளை பிடித்தபடி, நீலநிற மாடர்ன் டிரஸ்சில், கண்ணில் கூலிங்கிளாஸ் அணிந்தபடி பிரியா பவானி சங்கர் இருக்கும் இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. இதில் பளீரிடும் தொடையை பார்த்து, ரசிகர்கள் கிறங்கிப் போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
